184
மறைமலையம் 7
―
கம்பராமாயணப் பாடல்களை “Unnatural berbole” எனக் குறிப்பிட்டுள்ளார்.
க்குறிப்புகளால் இயற்கையை அடிகளார் நெறி திறம்பா
முறையில் நோக்கிய நோக்குத் தெளிவாம்.
நலம் பாராட்டல் :
புலவர்களின் பெருமித உணர்வையோ, பிறர்க்கு இல்லாத மேம்பாட்டையோ, ஒப்புயர்வில்லாப் பொருளமைந்த செய்யுளையோ, தாங்குதற்கு அரிய அல்லலையோ பயிலும் போது அவற்றில் தம்மை இழந்து வயப்பட்டு அவற்றின் நலங்களைப் பாராட்டி வரைகிறார் அடிகள். இம்முருகியல் தனிப்பெருஞ் சிறப்பினதாம்.
சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடினார். அப்பாட்டில், “Very bold request of a poet” என வரைகின்றார்.
சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த ளந்தத் தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்ட பாட்டில், “The honesty of the gold poet” என வரைகிறார்.
துறையூர் ஓடைகிழார் பாட்டையும் (புறம், 139) பெருஞ் சித்திரனார் பாட்டையும் படித்து உருகி நைந்து “Extreme poverty of the pet” என வரைகின்றார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறப்பாட்டையும்
(192)
66
“நம்பொருள் நம்மக்கள்” என்னும் தேவாரப் பாட்டையும் முறையே மிக உயர்ந்த கொள்கை வாய்ந்த பாட்டு என்றும். “High Moral teaching” என்றும் வரைகின்றார்.
“ஊர்க்குறு மாக்கள்” என்னும் ஒளவையார் பாடலையும், மைம்மீன் புகையினும் என்னும் கபிலர் பாடலையும் பயின்று, "Very fine Picture" என்றும் “Fine Picture” என்றும் குறிக்கிறார். இத்தகு குறிப்புகள் திறமான பாடல்களைத் தேர்ந்து தொகை செய்யப் பெருந்துணையாம்.