பக்கம்:மறைமலையம் 7.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

அணிநலம் பாராட்டல் :

185

டம்

உவமை முதலிய அணிநலங்கள் செய்யுளில் இட பெற்றிருக்கும் எனின் அவற்றைத் தனித்தனி தரங்கண்டு தனித்தனி அடைமொழி நடையிட அடிகளார் பாராட்டுகிறார்.

எங்கும் பொதுவாகக் காணக் கிடைக்கும் உவமையை 'Simile' என்ற அளவில் குறிக்கிறார். தனிச்சிறப்புடையவற்றை “அழகிய உவமை" எனவும் “Apt simile”, “Fine simile”, “Vivid Simile”, "Natural simile”, “Striking simile from nature”, “High spiritual simile", “Raresimile” என்று தக்காங்கு உரைக்கிறார்.

ஒருதாய் தன் இனிய மகவைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டி மகிழ்வது போல் உவமையை காஞ்சுகிறார்.

இலக்கணம் இயம்பல் :

அடிகளார்

இலக்கண அருமை இலங்கும் இடங்களில் மிக அரிதான வற்றைச் சுருங்க வரைந்து செல்கிறார் அடிகளார்.

66

"அருந்தே மாந்த" என்பதில், "பெயரெச்சத்துக்கு ஈற்றகரம் “தொக்கது” என்றும் “காண்கு வந்திசின்” என்பதில் ",சின் தன்மை இடத்தில் வந்தது எனவும் வெலீஇயோன் என்பதில் அளபெடை பிறவினைப் பொருள் தர வந்தது எனவும் “உரைத்திசின்” என்பதில் “இசின் முன்னிலைக்கண் வந்தது” எனவும் வரைகின்றார். மேலும் உரையில் இலக்கணக் குறிப்புள்ள இடங்களில் தக்க எடுத்துக்காட்டுக் காட்டுவதும் அடிகளுக்கு இயல்பாகும்.

6

66

னகர வீற்றுச் சொல் வேற்றுமைக்கண் அம்முப் பெற்று நிற்கும்” என்றும் குறிப்பிற்குக் “கான் கான்” என்பதை எடுத்துக் காட்டு கிறார். “கானம்” என ஆகுமன்றோ.

சொல்லாய்வு :

சொல்லாராய்ச்சியில் தலை நின்றவர் அடிகளார். தங்கத்தின் மாற்றை உராய்ந்து காண்பார் போலச் சொல்லையும் சொல் மூலத்தையும் ஆய்ந்து கண்ட ஆசிரியர் அடிகளார். தாம் ஆயும் நூல்களில் வரும் தமிழ்ச் சொல், வடசொல், திசைச் சொல் ஆகியவற்றை எண்ணிக் கணக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/210&oldid=1578339" இலிருந்து மீள்விக்கப்பட்டது