மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
193
சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாது போவர்; ஏனென்றால், அங்ஙனங்குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும், பேருழைப்பும், நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையும் காலக் கழிவினையும் பொருட்படசெலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்ப தொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன் றுக்கும் மேற்கோள்களும் இடங்களும் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம்முறையினைத் தாமும் கையாண்டு உண்மை ஆராய்ச்சியினை ஓம்பு வாராக!”
இவ்வாறு தம் ஆய்வுமுறை இன்னதென்றும், இம்முறை துயர்க்கும் இழப்புக்கும் உரியது எனினும் உண்மை காண்டற்கு இன்றியமையாதது என்றும் இதனை மேற்கொள்ளல் ஆய்வார்க்கும் ஆய்வுக்கும் நலப்பாடு என்றும் கூறுதல் விளங்கும்.
சார்பு இன்மை :
ஆய்ஞருக்கு, அவர் இவர் என்றோ, அப்பொருள் ப்பொருள் என்றோ, சார்பு சார்பின்மை என்றோ நடுநிலை பிறழ்ந்து ஆய்வு செய்தல் ஆகாது என்றும் அடிகளார் நெறி காட்டியுள்ளார்.
.
இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலும் தெய்வத்தன்மையுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும்பிழையெனக் கண்ட வைகளை மறையாது வெளிப்படை யாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.
ன
கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரே,
"அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
என்று அருளிச் செய்தமையானும் தெளியப்படும்.