மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
273
அப்பரடிகளும் அப்பூதியடிகளும் சாதி பாராது கலந்து ண்டலைக் காட்டுகிறார்.'
நமி நந்தியடிகள் ஆரூர்த் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பிய காலை இல்லுள் நீராடிப் புகக் குளிநீர் அமைக்குமாறு கூறித் திண்ணையில் கண்ணயர, அதுகால் ஆரூர்ப் பிறந்தார் அனைவரும் அடியாராக இருக்கவும் ஆங்கே இழிகுலத் தீட்டுக் கழித்தல் எற்றுக்கு என்று இறைவன் கனவில் உரைக்கக் குளியாதே இல்லுள் சென்றதை எடுத்துரைக்கிறார் (ப.த.கொ. சை. சமயம் 59) சோமாசி மாறனார்க்கு இறைவன் பறைவடிவு கொண்டு பாலித்ததையும் உரைக்கிறார்.
மாலியத்திலும் சாதிப்பாகுபாடு இல்லாமையை அரங்கப் பெருமான் லோக சாரங்கர் கனவில் தோன்றிப் பாண்பெருமாளைத் தோளின் மேல் ஏற்றிக் கொண்டு வருக என அவ்வாறே தோளில் கொண்டு திருமுன் விட்டதைச் சுட்டுகிறார் (60)
திருமழிசையார் திருவாளனால் வளர்க்கப் பெற்றதையும் எடுத்துரைக்கிறார் (60)
வ்வாறு பலபல கூறும் அடிகளார், “நீ தேவாரம் ஓதி என் செய? திருவாசகம் படித்து என் செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்று இல்லையே! டு
பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து
சோறு
தின்பாரைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்கிறாய். அப்படி யானால் பிறவற்றைக் கிட்டே சற்றும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னும் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லல் வேண்டும்?” என்று கடிந்துரைக்கிறார். (65)
இழிகுடியாகக் கருதப்படுவோர் தாம் செய்ய வேண்டும் செயற்பாடுகள் இவை எனவும் அடிகள் உரைக்கிறார்.
உயர்த்தும் வகை :
இழிந்த குடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்குரிய பெயராற் கூறித் தம்மைத் தாமே தாழ்வு