பக்கம்:மறைமலையம் 7.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

293

காட்சிகளின் சுவைப் பெருக்கத்திற்கும், காட்சியருமை களைக் கண்முன் நிறுத்திக் காட்டுதற்கும் ஏற்ற வகையில் சிறந்த பின்புலங்களைத் தம் உரைத்திறனால் உருவாக்குவதில் வல்லவர் அடிகளார். “பனிக்காலத்தே இலையுதிர்ந்த மரஞ் செடி கொடிகள் வெயிற்க்ாலத்தே புதிது தவிர்த்து அரும்பு கட்டுதலும் அவ்வரும்புகளில் உள்ள தேனைப் பருகுதற் பொருட்டு வந்த வண்டுகள் அவற்றைக் குடைதலும், அதனால் முறுக்கவிழ்ந்த அவ்வரும்புகளிலிருந்து நறுமணம் புறந்தோன்றி வீசுதலும், அப்போது அழகிய மாதர்கள் அசோகமரச் சோலைகளிற் புகுந்து அதன் பூங்கொத்துக்களைப் பறித்துக் காதுகளிற்செருகித் தம்மை ஒப்பனை செய்துகொண்டு ளையாட்டயர்தலும் இயற்கையாய் நிகழ்தலின் அவ்வேனிற் கால அழகினை நடி என்பாள் இங்ஙனம் புனைந்து பாடு வாளானாள் என அமையும் பகுதியில் அடிகளாரின் சொற்கள் அழகுக் காட்சியின்பந் தந்து விளங்குதல் இன்புறத் தக்கது.

9938

காளிதாசர் நிறை-குறை

முதல் நூற்புலவரின் நிறை குறைகளையும் நடுவுநிலையில் எடுத்துக் காட்டும் இயல்பினர் அடிகளார். சகுந்தலை மீண்டும் கணவனை அடையும் வழிவகை நிகழ்ச்சிகளின் தொடர்பு முறை, நாடகவியல்புகளில் புலப்படும் நுண்மாண் நுழைபுல வியல்பு ஆகியவற்றில் காளிதாசரின் பெருந்திறன் வெளிப்படு கிறது.39 “நாடகக் கதையினை முற்றுந் தொடர்புபடுத்தி முடித்துப் பயில்வாரது உள்ளத்தின் வேட்கையைத் தூண்டச் செய்து, அவரை மிக மகிழச் செய்யுந் திறனும்,40 “நாடக மாந்தரின் ஒழுகாலறுகளெல்லாம் அவரவர் இயற்கையின் வழியவாய்த் தோன்றி நாடகக் கதையினை நடாத்துமென்று உணர்த்தியமையுந் திறனும்,4 காளிதாசரிடையே பாராட்டத் தக்கன. மாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட சாகுந்தல நாடகக் கதையில், சகுந்தலையைத் துருவாசர் வைததாக அமையும் நிகழ்ச்சியும், துருவாசனின் வசவினைச் சகுந்தலை அறியாளாய் அமைத்திருக்கும் முறைமையும் நாடக நிகழ்ச்சியின் சுவை மிகுதி, நாடக நிகழ்ச்சிகளின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு காளிதாசர் திறம்பட அமைத்தனவாகும்.42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/318&oldid=1578449" இலிருந்து மீள்விக்கப்பட்டது