ஞானசாகரம்
121
யோனியோ? புருடனோ? இதனைச் சிந்தித்தல்வேண்டும். ஆன்மாத்தனித்து நிற்றலாலே அவற்றினுடைய சேர்க்கையன்று. இன்பத்துன்பங்களுக்குப் பிறிதோர் காரணம் வேண்டப்படுதலால், ஆன்மாப் படைப்புத் தொழிலை யியற்றவல்லதன்று.
(2)
தியான யோகநெறிநின்றோர், பரமான்மாவின்கணுள்ள இயற்கைக் குணங்களாலே மூடப்படுகின்ற திருவருட் சக்தியே காலமுதலாக நிற்குங் காரணங்களையுஞ் சீவான்மாவையுந் தன்வழிநிறுத்தி நடாத்துகின்ற தென்றறிந்தார்.
(3)
அவனை, மூன்றடுக்கான் மூடப்பட்டு ஒரே சுற்றுள்ளதாய் அச்சுற்றிற் பதினாறு துண்டுகளுள்ளதாய், அச்சுற்றிற்சென்று முடியும் ஐம்பது கால்களும் இருபது எதிர்கால்களுமுள்ளதாய், ஆறுகூறுள்ள எட்டாணிகள் தறையப்பட்டதாய்ப், பல்வேறு வண்ணமுடைய கயிறு பூட்டப் பட்டதாயுள்ள ஓர் உருளாகக் கருதுகின்றோம். அது செல்லும் நெறி மூன்றுவகையாயுள்ளது. அஃது இரண்டு சுவடுகள் பட ஒருதரம் உருளும்.
(4)
அவனை, ஐந்து நீரோட்டங்களினின்றுந் தரப்படுகின்ற நீருடைய ஆறாகக்கருதுகின்றோம். அவ்வைந்து நீரோட்டங்களும் ஐந்து உற்பத்தித் தானங்களால் உக்கிரமாகவுங் கோணலாகவு மிருக்கின்றன. அவற்றின் அலைகள் ஐந்து பிராணவாயுக்களாம். அவற்றின் மூலத்தானமானது ஐந்தறிவுகளைத் தருகின்றது. அஃது ஐந்து சுழல்களை யுடையது. அவ்வைந்து சுழல்களும் ஐவகைத்துன்பங்களால் வேகமாகச் சுழற்றப் படுகின்றன. அத்துன்பங்கள் ஐந்தும் ஐவகைக்கிலேசங்களாற் பகுக்கப் படுகின்றன. அவை ஐந்து சுற்றுக்களுடையன.
க
சருவசீவர்களுக்கும் நிலைக்களனாயும் நிலைக்களனாயும்
(5)
அவற்றிற்கு
அந்தமாயும் அளவின்றி மிகப்பெரிதாயு முள்ள இந்தப் பிரமசக்கிரத்தில் திரிதரும் யாத்திரிகனான ஆன்மாவானவன் தன்னையுந்தன் றலைவனையும் வேறாகப்பாவிக்கின்றான். அவனாற் பற்றப்படுங் காலத்து அது எய்துகின்றது.
அது மரணமில்லாமை
(6)
துவே பரம்பொருளென்று உறுதியுரை மொழியப்
பட்டது. இவனிடத்தில் மூன்று முள்ளன. இவனே
அழிவில்லாதவனுந் தானே எவற்றையும் நிலைபெறுத்து