ஞானசாகரம்
அயலார்
நினையாமையாம்
பாருளைச்
சிறிதும்
385
அபகரிக்க
-
தேகாதிப்பிரபஞ்சத்தை நானென்று
மதியாததெளிவும் அத்தேயமாம்.
-
பிறர்மனைவிழையாமை;
சிந்தையைச்செலுத்தலும்
(4) பிரமசரியமாவது
வரைவின் மகளிர் விழையாமை முதலிய ஆண்டகைமையாம். முதல்வன் றிருவடிகளிற்
பிரமசரியமாம்.
(5) தயையாவது - தன்னுயிர்போல மன்னுயிர்களையும் ஒப்பக்காண்டலாம்
(6) ஆர்ச்சமாவது மக்கள் மனைவி முதலிய உறவினரிடத்தும் பகைவரிடத்தும் தன்னிடத்தும் சமபாவனை வைத்தலாம்.
ன
(7) க்ஷமையாவது - பகைவர் முதலியோராற் றுன்பஞ் சம்பவித்தாலும் பொறுத்தலாம்.
(8) திருதியாவது முதல்வன் றிருவாய்மலர்ந்தருளிய வேதசிவாகமங்களை முத்திபெறுதற்கு ஏதுவாமென்று நம்புவதாம். முதல்வனது அஷ்டமூர்த்தங்களில் ஒன்றாகிய யான் அம்முதல்வனின் வேறல்லனென் றெண்ணுதலுந் திருதியாம்.
(9) மிதாகாரமாவது தேவாமிர்தத்துக்கு ஒப்பாகிய உணவையும் கூழையுஞ் சமமாகக்கொண்டு உண்பதாம். அதிகமாகவுங் குறைவாகவுங் கொள்ளாது அன்னம் அரைக்கூறும் நீர்காற்கூறும் உண்டு காற்கூறிடம் வாயுசஞ்சரிக்க விடுவதும் மிதாகாரமாம்.
(10) சவுசமாவது உ ம்பினை மண்ணாதிகள்கொண்டு விதிப்படி நீரினாற் சுத்திசெய்வதாகிய பாகிய சவுசமும் அறிவினாலே வேதமுடிபாகிய சித்தாந்தப்பொருளை மனத்திற் பொருந்த நினைத்துப் பாசங்கழியும்வண்ணம் நிற்பதாகிய
மானதசவுசமுமென இருவகையாம். இன்னும்வரும்.
நியமம்.
மதுரை
திருஞானசம்பந்தசுவாமிகள்
மடம்
இனி
இங்ஙனம் சுப்பிரமணியபிள்ளை