ஞானசாகரம்
45
எல்லாச்சமயங்களும் மெய்ச்சமயங்களே யாய், எல்லாம் வீடுபேற்றின்கண் உய்க்கும் வழிகளுந் துறைகளு மேயாய், முழுமுதற் பெருங்கடவுளாகிய தந்தையை ஆன்மாக்க ளாகிய பசுங்குழவிகள் சென்று அணையுங்காறும் அறிவூண் தந்து வளர்க்குந் தாய்மார்களேயாய் விளங்குவன என்னும் வாக்கியக் கூறுகளே அதற்குச்சான்றாம்.
மற்று நங்கருத்து யாதோவெனின்;
ை
எல்லாச் சமயிகளும் தாந்தாம் உண்மையெனக்கொண்டு உபாசிக்குந் தெய்வங்களைத் தாந்தாம் அனுசரித் தொழுகும் விதிபிறழாது தழுவக் கொண்டு உறுதிபெறல் வேண்டுமென்பதே நங்கருத்தா வதாம். இதனை விடுத்துச் சைவனொருவன் சிவவழிபாடு நீங்கி வேறு சமயிகள் உபாசிக்குந் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும், அவ்வாறே அவ்வேறுசமயிகள் தம்மதங்களுக்கி ணங்காத பிறசமயத்தெய்வங்களைப் பாராட்டிப் போற்று தலும் வரம்பழித்துச் செய்யு முறையாதலால் அவைபெரிதும் டர்ப்படுதற்கேதுவாய் முடியுமென்றொழிக அற்றேல், சாக்கியநாயனார் தாந்தழுவிய பௌத்தசமயவழி நின்று உறுதி பெற மாட்டாராய்ச் சிவவழிபாடு இயற்றியது வழுவாம்போலு மெனின், அற்றன்று, அவர் மேலைச்சென்மங் களிற் செய்து போந்த தவமுதிர்ச்சியால் தமக்கு மெய்யறிவு விளங்கி அதிதீவிர பக்குவமுடையராகப் பெறுதலால், அப்பக்குவ நிலைக் கேலாத பௌத்தசமயம் விடுத்து அதற் கேற்பதான சைவம்புகுந்து சிவனை வழிபட்டு உய்ந்தாராகலின் அதுவழு வாமாறு யாண்டையதென்றொழிக. அஃதாயின், அவர்தம் மேலைச் சன்மத் தவமுதிர்ச்சிக் கேற்பச் சைவ சமயத்திற் பிறந்து அவ்வாற்றாற் சிவனை வழிபடுதலன்றே மரபாமெனின் நன்று சான்னாய் அவர் மேலைச் சென்மங்களில் அரிதாற்றிய தவவூழ் அவரைச் சைவசமயத்திற் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே அவர்க்கு அவ்வதிதீவிரபக்குவத்தைப் பயப்பிக்க மாட்டா தாய்ப் பௌத்தசமயத்தின் கண்ணே அவரைப் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே இடையொரு காலத்து அவ்வதிதீவிரபக்குவத்தைப் பயப்பிக்கும் பெற்றித்தாய் முற்கொண்டு அமைந்துகிடந்தது; பின் அக்கிடப்பின் படியே முடிந்ததாகலின் அதுகடா வன்றென மறுக்க. இனிப் பலவகைச் சமயமுடிபொருள் களையும் நுண்ணிதாக ஆய்ந்து அதனான் மெய்யறிவு மிகவிளங்கித் தாம் மெய்யெனக்கண்ட ஒரு