ஞானசாகரம்
63
விடுத்தார். அதுகண்ட பிள்ளையாருந் தந்திருக்கூட்டத் தோடும் ஒருமடத்தில் எழுந்தருளி யிருக்கச்செய்தார். இதனை யறிந்த சமணக்குருக்களெல்லாருந் தெய்வப்பெற்றியுடைய இப் பிள்ளையாரால் நமது சமயம் அழிந்துபடும் எனப்பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத்தோடுங் கொலை செய்ய எண்ணினார்..... இதுதானோ கொல்லா விரதியாரான சமணருக்கு விரதமாவாது! அன்பர்களே! சிறிது ஆழ்ந்து சிந்தித்திடுங்கள் இங்ஙனம் கருதிய அக்குருக்கண் மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டியனிடஞ் சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் காவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக்கொண்டனர். பின் அன்று இரவு நள்யாமத்திற் பின்ளையார் திருக் கூட்டத்துடன் பள்ளிகொண்டிருக்கும் அமயங்கண்டு அச்சமணப்படுவர் எரிகொள்ளி கொண்டு மடத்தில் தீக்கொளுவினார். அந்தோ! அந்தோ! தீப்பற்றி மடம் எரிகின்ற ம் காலத்தில் மடாலயத்தினுள்ளிருந்த அடியார்க ளெல்லாரும் மருண்டெழுந்து ஞானசம்பந்தப்பிள்ளை யாருக்கு விண்ணப் சிவத்தியானஞ் செய்து
பித்துஅடைக்கலம்புகுந்து கொண்டிருந்தார். இதனை உணர்ந்த பிள்ளையார் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக் கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து, இதற்குக் காரணமாயினான் பாண்டிய வரசனேயா மென்பதும் இனிது தெளிந்து,
“செய்யனே திருவாலவாய்மேவிய
ஐயனேயஞ்சலென்றருள் செய்யெனைப் பொய்யாராமமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியர்க்காகவே”
ய
என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடாலயத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன்றே கத்திற்சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும், உருவமாகத்தோன்றிய தீப்பிழம்பு முழுவதும் அருவச்சுர நோயாய்ப் பாண்டியனைப்பற்றிக்கொண்டது. உடனே பாண்டியன் அந்நோய்பொறுக்கமாட்டானாய்ச் சமணக் குருமார்களை அழைப்பித்து அவர் தம் மந்திரவிச்சைகளானும் ஒளடதமுறைகளானும் செய்வித்துக்கொண்ட பரிகாரங்கள்