பட்டினப்பாலை
ஆராய்ச்சியுரை
219
துஞ்சி - உறங்கி.
துஞ்சும் - தங்கும், “அறந்துஞ்சுஞ்
―
செங்கோலையே”
புறநானூறு.
துடி உடுக்கை, பாலைப்பாறை.
―
துடுப்பு கணு.
துணை கணவன்.
துப்பு – வலிமை.
துய்த்தும் - நுகர்ந்தும்.
துயில் - உறக்கம்.
துவன்று – நிறைந்த, நெருங்கிய,
“துவன்று நிறைவாகும் தொல்காப்பியம், உரிச்
சொல்லியல்.
துறக்கம் - வானுலகு.
துறுகல் - பொறைக்கல், சிறுகுன்று, "புலவுசேர் துறுகல்" என்றார் ஐங்குறு நூற்றில்.
துறைபோகிய - முற்றக் கற்ற.
துறைபோகலின் - முற்ற முடித்தலின்.
தூ தூய.
தூஉய் - தூவி, “மலைவான்
-
கொள்கென உயர் பலி
தூஉய் புறநானூறு.
தூங்கு - அசையும்.
—
தூசு கூறை.
தூதுணம்புறவு - தூதுஉண்
அம்புறவு எனப்பிரித்துச் 'சிறுகல்லைத் தின்னும் அழகிய புறா' எனப் பொருளுரைக்க; "தூதுணம்புறவெனத் துதைந்தநின் னெழினலம்” என்றார் கலியினும்.
66
தூறு - சிறுசெடி.
தெவ்வர் - பகைவர், "தெவ்வுப் பகையாகும்" தொல். உரி.
தெறுவு - சுடுதல், “தெறுகதிர்க் கனலி” என்பது புறநானூறு.
―
தென்னவன் பாண்டியன்.
தேஎம் - நாடு, தேயம்.
தேம்ப - வாட.
தேறுநீர் - தெளிந்தநீர். தொக்காங்கு - கூடினாற்போல.
தொட்டு – அகழ்ந்து தோண்டி. தொடி கடகம்.
தொடுதோல் செருப்பு. தொடை – படி, கட்டு, ஆகு பெயரால் யாழை உணர்த் திற்று.
தொல்சீர் - பழைய சிறப்பு.
தொல்லிசை - தொல் இசை, அடிப்பட்டபுகழ்.
தொலைத்த அழித்த.
நகர் - வீடு, 'மாளிகை' என்பர் புறப் பொருள் வெண்பா மாலை உரைகாரர், பொதுவியற் படலம், கோட்டம்; கோயில்,
―
66
'முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே" என்றார்
புறநானூற்றினும்.
நசை விருப்பம்.
நடுகல் - இறந்துபட்ட மறவனை
நினைவு கூர்தற்கு நட்ட கல், இங்ஙனங் கன்னடுதலைப் “பரலுடை மருங்கின்'