220
மறைமலையம் – 9
என்னும் புறப்பாட்டிற்
—
காண்க .
நடுவு நடுநிலைமை.
நண்ணார்
பகைவர்.
நந்தா – அவியாத.
நயந்தும் - விரும்பியும்.
நறவு - கள்.
நறு – நல்ல.
நன்பகல் - உச்சிப்பகல், புறப்
பொருள் வெண்பாமாலை உரை, வஞ்சிப்படலம்.
நனந்தலை – அகன்ற இடம், தொல்காப்பியம், உரியியல்,
நனி - மிகுதி, தொல்காப்பியம், உரியியல்.
நாடி - ஆராய்ந்து.
நாண்மீன் - நட்சத்திரம்.
நாப்பண் – நடு.
நாவாய் - மரக்கலம்.
―
நிரைத்து வரிசையாக வைத்து.
நிலைஇய – நிலைபெறற்குக்
காரணமான.
நிறீஇ - நிலைபெறச் செய்து.
நுகம்
வண்டிமாட்டுகளின் பிடரிற் றங்குங் குறுக்குக் கட்டை. இதனை 'நுகத்தடி’ என
வழங்குப.
நுதல் - நெற்றி.
நெய்தல் - குவளைப்பூ.
நெருஞ்சி ஒரு முட் பூண்டு.
நேரிழை – ஏற்ற அணிகலம், பரிபாடலுரை.
நொடை – விலை.
நோன் - வலிய.
பஃறகைப்பு - ‘பல் தகைப்பு' பல பகுதிகள்; பலகட்டுகள்.
பஃறி - - படகு, 'தோணி' என்பர் திவாகரர்.
―
பகடு பெருமை, 'பகட்டெருத்து' பெரிய எருது, பேரெருது.
பகர்ந்து – வெளியாகச் சொல்லி.
பகல் - நுகத்தின் நடுவிற் றைத்த
ஆணி.
பசும்பதம் - பசிய சோறு.
படப்பை - தோட்டம், பிங்கலந்தை.
படிக்கால் - ஏணி, “வானுலக மேறுதற்குச் செம்பொன், இருளில் படிக்கால்” என்றார் சீவகசிந்தாமணியிலும்.
பண்ணியம் - பண்டம், "குரங்
கருந்து பண்ணியம்” என்னும் பரிபாடலுரையிற்
பரிமேலழகர் இப் பொருளே கூறுதல் காண்க.
பணிபு - தாழ்ந்து.
பணியம் பண்டம், 'பண்ணியம்’ பணியம் என நடுவே தொக்கது.
பணை
குதிரைப்பந்தி, இலாயம்,
மருதநிலம்.
பதம் - சோறு, உணவு.
பதாகை (வடசொல்) - பெருங்
கொடி.