இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
45
நச்சினார்க்கினியர் இவ்வாறு ஒரோவிடங்களில் நலிந்துரை எழுதுதல் பற்றி இகழப்படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத்து கின்றாம். இனி இம் முல்லைப்பாட்டினுரை நச்சினார்க்கினியராற் பெரிதுஞ் செய்யுளை அலைத்து வரையப்பட்டதாகலின், அவருரையின் உதவிகொண்டே இப்பாட்டுக்குச் செவ்வையான வேறொரு புத்துரை பின்னர் எழுதுகின்றாம்; அங்கு அதனைக் கண்டுகொள்க.