* முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை 55 பொழுதளந் தறியும் பொய்யா மாக்க
டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி, "யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்ன லினைத்” தென் றிசைப்ப, மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை 60 மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞா ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு,
65 ளுடம்பி னுரைக்கு முறையா நாவிற் படம்புகு மிலேச்ச ருழைய ராக, மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ, தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப்
70 பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந், தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்து
75 மொருகை பள்ளி யொற்றி யொருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை,
80 யின்றுயில் வதியுநற் காணா டுயருழ்ந்து, நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையினடுங்கி யிழைநெகிழ்ந்து
53