பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தத் தெய்வத்திற்கும் நிறைய அணிமணிகள் உண்டு! வைகாசி விசாகம் புகழ் பெற்றது. விசாகத் திருவிழாவை நாட் டுக் கோட்டை வம்சத்தார் தங்களுக்குக் கிடைத்த தேசிய த் திருவிழாவாக எண்ணி வீட்டுக்கு வீடு விருந்து வைத்து ஆரவா ரத்துடன் கொண்டாடுவார்கள். இந்த ஊரில் கூரை வீடுகளேவிட கெட்டியான மச்சு வீடு களே அதிகம். பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு வியா பாரம். சிலருக்கு பர்மாவிலே வட்டிக்கடை, வேறு சிலருக்கு சிங்கப்பூரிலே ஜவுளிக்கடை, மிகுதிப்பேருக்கு சுமித்ரா, ஜாவா பகுதிகளில் கமிஷன் கடைகள். நாளடைவில் பர்மா சுதந்திரம் அடைந்தது. பர்மாவின் எழுச்சி, அங்கு வாழ்ந்த தமிழர்களின் தொழிலுக்கும், முன்னேற் றத்திற்கும் தடையாக அமைந்து விட்டது. அத ைல் பர்மா தமிழர் கள் வாழ்க்கையில் நொடித்துப் போளுர்கள். பர்மா பணம் இந்தியாவிற்கு அனுப்புவது தடை செய்யப்பட்டது. இதல்ை தமிழ் நாட்டிலுள்ள சிங்கப்பூர் கடைக்காரர்கள் வாழ்விழந்த பர்மாக் கடைக்காரர்களே ஏளனமாகக் கருதினர் கள். சிங்கப்பூர் கடைக்காரர்கள் கை ஓங்கியது. மேலும் மேலும் அவர்கள் சொத்துக்களே வாங்கிக் கொண்டே வந்தார்கள். அதற்கு நேர்மாருக பர்மாக்கடைக்காரர்கள் குடியிருந்த வீடு களையே இடித்து விற்கத்தலைப்பட்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு பர்மாவிலே இருந்து கொண்டுவந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட வண்ண வண்ண .ே த க் கு ம ர உத்திரங்களைக் கொண்ட வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து விட் டன. சிங்கப்பூர் கடைக்காரர்கள் மலிவாக அவைகளை வாங்கி புதிய மோஸ்தரில் வீடுகளைக் கட்டினர்கள்; புதிய கார்கள் விட் டுக்கு வீடு நின்றன. பாவம் பர்மாக் கடைக்காரர்கள் பல்லுப் போன பழைய காலத்துப் பந்தயக் குதிரைகளைப்போல மன மொடிந்துபோனர்கள். தாங்கள் பர்மாவில் இருந்தோம், வாழ்ந் தோம் என்பதற்கு அடையாளமாக அவர்கள் தங்கள் கைகளில் ஒரு பவள வேரையும், காலில் மரக்கட்டைச் செருப்பையும்தான் அணிந்திருந்தார்கள்.