பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

17

கே. பி. நீலமணி 17.

காப்பி போட்டுக் கொண்டு வந்தாள். மறுக்காமல் சோபியா, இரண்டு கையாலும் வாங்கிக் குடிக்கிற அழகைப் பார்த்து ரசித்தபடி அவள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு உள்ளே புறப்பட்டாள்.

அப்போது பாபு சட்டென்று, 'அம்மா, அப்படியே கொஞ்சம் அந்தச் சேர்லே உட்காரும்மா...' என்று ஓர் உத்தரவு போல் கூறிவிட்டு, டேப்பை, ரிகார்டரில் நூறு அடி பின்னால் தள்ளி ஒடவிட்டான். அம்மாவுக்கு துாக்கி வாரிப் போட்டது.

'இதென்னடா கூத்து! நாங்க பேசிண்டதை எல்லாம் எடுத்து வெச்சிருக்கே!”

"சும்மா ஒரு டெஸ்ட் அம்மா. ஏன் சோபா? அம்மா வோடு வாய்ஸ் மைக்குக்கு ரொம்ப ஸ்யூட்டா இருக்கு இல்லே...?’’

போடா, நீயும் உன் போக்கிரித்தனமும்!’ என்று அம்மா உள்ளே போய்விட்டாள்.

'நீங்க அந்தப் போர்ஷனை ‘எர்ரேஸ் பண்ணப் போlங்களா?' என்று கேட்ட சோபியாவை பாபு ஆச்சர் யத்துடன் பார்த்தான்.

ஏன்? அம்மா பேச்சு உனக்கு வேனுமா?’’ "ஆமாம். நான் அதை ஊருக்கு எடுத்துக் கொண்டு போகிறேன். ஒரு மெமொரி.'

பாபு கடகட வென்று சிரித்தான்

கவலைப்படாதே. உனக்கு போர்’ அடிக்கற வரை, அம்மாவைப் பேசச் சொல்லி, ஒரு முழு டேப்லே ரிக்கார்ட் பண்ணித் தரேன். இப்போ... ப்ளீஸ்...நீ பாடு.” என்ன பாட? ஜாக் ஸ்னோட ஒரு ஹிட் ஸாங்

பாடவா?’’

ம-2