50
மலருக்கு மது ஊட்டிய வண்டு
SO மலருக்கு மது ஊட் டிய வ
கொண்டிருந்தன. வழியெல்லாம், வளர்ந்து கொண்டே போவது போலிருந்தது.
வீட்டுக்குள் அடி எடுத்து வைத்த காசிராஜனை உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த விசும்பலும், அம்மாவின் அதட்டல் குரலும் அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டன.
இவள் எப்போது வந்தாள்? காசிராஜனுக்குத் திக்’ கென்றது.
சாந்தாவின் விசும்பலை லட்சியம் பண்ணாமல் அம்மா கடுமையான குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்: *அப்படி இருக்கிறபோது, இங்கே ஏண்டி புறப்பட்டு வந்தே? வைத்தியம் பார்த்துண்டு உங்கம்மா வீட்டிலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே?”
சாந்தா இதற்கும் பதில் ஏதும் கூறவில்லை. அவளு டைய பதிலை அம்மா எதிர்பார்க்கமில்லை போலும்! * டாக்டர் உடம்பைப் பார்த்துட்டுக் கடைசியா என்ன தாண்டி சொன்னார்? குழந்தை பிறக்குமா, இல்லே எப்போதுமே பிறக்காதா?’’
இந்தக் கேள்விக்கும் சாந்தாவிடமிருந்து அழுகையே பதிலாக இருக்கவே, முடிவு தெரிந்து போன அம்மாவின் ஆத்திரம் எல்லை மீறியது.
տ : Դ:
கேட்டால் பதில் சொல்லித் தொலையேன்! அழுகை என்ன வேண்டிக் கிடக்கு அழுகை? போயும் போயும்
உன்னைத்தேடி, ராஜா மாதிரி என் பிள்ளைக்குக் கட்டி வெச்சேன் பாரு: என் தலையெழுத்தைச் சொல்ல ணும்' என்று தலையில் மடார் மடார்’ என்று
அடித்துக் கொள்ளவும். காசிராஜன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது,
அவன் வந்தவுடன், வீடு சகஜ நிலையில் இருப்பது போல், பொய்யான தோற்றத்தில் காட்சியளித்துக்