பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி 71

பூட்ஸ் ஒலியைத் தொடர்ந்து ஒரு "வான்’ வந்து

நின்றது. அதிலிருந்து சிலர் இறங்குவதையும் பிள்ளை உணர்ந்தார்.

-மகன் கட்டளை இட்டிருக்கிறானே!

குளமாயிருந்த விழிகளைச் சட்டென்று பிறர் அறியா வண்ணம் துடைத்துக்கொண்ட பிள்ளையவர்கள் அந்த "லாக்'அப்பையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந் தார். பிரளயமாக உள்ளத்தினுள் பெருக்கெடுக்கும் சோகத்தில் அவருக்கு மட்டும்தானா பங்கு இதயமே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது.

- காமாட்சி...! நீ இன்னும் கொஞ்ச காலம் காத் திருக்க வேண்டியதுதான்...'- என்று மெல்ல அவரது

உதடுகள் முணுமுணுத்தன.

-தினமணி சுடர்