பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனாய்க் குருடாய் இல்லாமல், கூப்பிடும் குரலைக் கேட்பவனாய் இருந்தும் நல்ல குணம் எதுவும் இல்லா திருந்தால் என்னபயன் ? அம்மா மகிழ்ச்சி கொள்ளுவளோ ? அதிகத் துயர்தான் அடைந்திடுவாள். 'பத்து மாதம் சுமந்தென்ன ? பாடு பட்டு வளர்த்தென்ன ? எத்தனை கஷ்டப் பட்டென்ன ? இதுபோல் பிள்ளை இருக்கிறதே! என்றே எண்ணி வருந்திடுவாள்; என்றும் கவலை கொண்டிடுவாள். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/105&oldid=859412" இலிருந்து மீள்விக்கப்பட்டது