பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ண உணவு தந்திடும் உழவர் வாழ்க, வாழ்கவே, மண்ணை உழுது பயிர்களை வளர்க்கும் உழவர் வாழ்கவே. ஒன்றை நூறு நெற்களாய் உண்டு பண்ணித் தருபவர்; நன்கு உழுது வியர்வையால் நனைந்து போக உழைப்பவர்; கண்ணைப் போலப் பயிர்களைக் காத்து உயிர்கள் காப்பவர் உண்ண உணவு இன்றியே உடல் வருந்தல் நீதியோ ? பாடு பட்டு உழுபவர், பலனும் கண்டு தருபவர், நாடு வளர வாழ்பவர், நன்கு வாழ்க, வாழ்கவே ! i{}{}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/106&oldid=859414" இலிருந்து மீள்விக்கப்பட்டது