பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மரமே, மாடே' என்றெல்லாம் மனிதர் திட்டிக் கொள்கின்றார். மரமும் மாடும் உதவுதல்போல் மனிதர் எங்கே உதவுகிறார் ? 萤 நிழலைத் தந்து களைப்பெல்லாம் நீக்குதல் அந்த மரமாகும். பழத்தைத் தந்து உடலுக்கே 6. பலததைத தருவது மரமாகும். விறகைத் தந்து அரிசியினை வேகச் செய்வது மரமாகும். பறவை கூடு கட்டிஇனம் பரவச் செய்வது மரமாகும். 袋 வயலை உழுது பயிர்களையே வளரச் செய்வது மாடாகும். வெயிலில், மழையில் மனிதர்களை விரைந்து இழுப்பது மாடாகும். it?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/124&oldid=859454" இலிருந்து மீள்விக்கப்பட்டது