பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரந்த உன்றன் அளவு போலக் கருங்கடலே-நாங்கள் பரந்த எண்ணம் பெற்றி டுவோம் பெருங்கடலே. தொண்டை மான்கள் என்றிட் டாலும் கருங்கடலே-மிக்கத் துணிச்ச லோடு எதிர்த்து மோதும் பெருங்கடலே. தோட்டி தொண்டை மானெ வர்க்கும் கருங்கடலே-நீயும் தொட்டுப் பாதம் கழுவி நிற்பாய் பெருங்கடலே. காற்றைத் தந்து மகிழ்ச்சி யூட்டும் கருங்கடலே-நாங்கள் கரையை நோக்கி வரவே செய்யும் பெருங்கடலே. முத்தை யெல்லாம் தோற்று விக்கும் கருங்கடலே-நல்ல முத்துப் போன்ற எண்ணங் கோள்வோம் பெருங்கடலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/133&oldid=859471" இலிருந்து மீள்விக்கப்பட்டது