பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னிடம் கடவுள் வந்துனக்கு எவ்வரம் வேண்டும் எனக்கேட்டால் இன்னிசை பாடும் பறவையதாய் என்னை ஆக்கிட வேண்டிடுவேன். விண்ணில் பறந்து திரிந்திடவே, ‘விர்'ரென மேலே கிளம்பிடுவேன். கண்ணுக் கினிய காட்சியெல்லாம் கண்டே திரும்பி வந்திடுவேன். காடுகள் மலைகள் எல்லாமே கடிதில் சென்று கடந்திடுவேன். வீடுகள் மாளிகை யாவிலுமே விரும்பி யமர்ந்து வந்திடுவேன். இதயத் தின்பம் பாய்ச்சிடவே இனிய கீதம் பாடிடுவேன். சுதந்திரம் பெற்ற வாழ்வினிலே துயரம் இன்றிக் களித்திடுவேன். 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/140&oldid=859486" இலிருந்து மீள்விக்கப்பட்டது