பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வச் சிறுமி: பொம்மைக்குப் பட்டாடை கட்டிடுவேன். பொன்னாலே நகைகளும் போட்டிடுவேன். அம்மாவோ அன்புடன் பட்சணங்கள் அடிக்கடி தந்திடத் தின்றிடுவேன். காரிலே பள்ளிக்கும் சென்றிடுவேன். காலால் நடந்துமே நானறியேன். ஜோரான காட்சிகள் கண்டிடுவேன். சொகுசாக என்றுமே வாழ்ந்திடுவேன். ஏழைச் சிறுமி: நாயினும் கேடாய் அலைந்துவிட்டேன். நடுங்கிக் குளிரில் ஒடுங்கிவிட்டேன். ஆயிரம் ஒட்டை இருந்திடினும் அணிந்திட ஒருதுணி போதுமய்யா. ஊரெலாம் பல்லைநான் காட்டிவிட்டேன். ஒருபிடி அன்னமும் போடவில்லை. யாரும் இரங்கிட வில்லையய்யா. இப்போதே சாகவும் சித்தமய்யா ! t38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/145&oldid=859495" இலிருந்து மீள்விக்கப்பட்டது