பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித ருக்குள் மாணிக்கம். மக்கள் போற்றும் தலைவராம். புனித மான விடுதலை பெறவு ழைத்த ஜவஹராம். பெருமை மிக்க குடியிலே பிறந்த பெரிய தலைவராம். அருமை யான தொண்டுகள் அதிகம் செய்த நேருவாம். சிங்கம் போன்ற வீரத்தால் திறமை மிக்க செய்கையால், தங்க மான குணத்தினால் தரணி போற்றும் தலைவராம். அருமை யான வாழ்விலே அதிகப் பாகம் சிறையிலே இருந்தார். ஆனால, அனறுநம இந்தி யாவின் பிரதமர் !

  1. 39
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/146&oldid=859497" இலிருந்து மீள்விக்கப்பட்டது