பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராரோ, ஆராரோ, ஆரிவரோ ஆராரோ. சூடா மணியே! துலக்கமாய் நின்றொளிரும் வாடா மலரே, என் மரகதமே கண்வளராய். கற்கண்டு சீனி கனிவகைகள் எல்லாம்உன் சொற்களால் நானடையும் சுகத்தினுக்கே ஈடாமோ ? கால்களை நீட்டிநன்கு கையைத் தலைக்குவைத்துப் பாற்கடலிற் பள்ளிகொண்ட பத்மநாபன் நீதானோ ? தர்மம் குறைகையிலே தாரணியில் நானுதித்தல் கர்மம் எனஉரைத்த கண்ணபிரான் நீதானோ ? $43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/150&oldid=859505" இலிருந்து மீள்விக்கப்பட்டது