பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பி நீபோய் வந்திடு. தங்கி இருக்கின் றே"னென அரச மரத்து அடியிலே அமர்ந்தார், தொந்திப் பிள்ளையார். காற்ற டித்த ஒசையில் காது கேளாக் குமரனும் சிறிது தூரம் சென்றுதான் திரும்பி பார்த்தான், அண்ணனை. அங்கும் இங்கும் பார்த்தனன்; அண்ணன் வரவு கண்டிலன்; உச்சி மலையில் ஏறினன்; உற்று எங்கும் நோக்கினன். கான வில்லை, அண்ணனைக் கண்ணுக் கெட்டும் வரையிலும். மலையின் மேலே நின்றி.டின் மரத்தின் கீழே தெரியுமோ? பார்த்துப் பார்த்து உச்சியில் பார்த்துக் கந்தன் நிற்கிறான். காத்துக் காத்துக் கணபதி காற்று வாங்கும் காட்சிபார் ! i49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/157&oldid=859520" இலிருந்து மீள்விக்கப்பட்டது