பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமு மிகமிக நல்லவனாம். நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம். எவர்க்கும் அன்பாய் நடப்பவனாம். இரக்கம் மிகவும் உடையவனாம். ஆயினும் நல்லவன் என்றவனை அறிபவர் மிகமிகச் சிலரேதான். ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம் ஒன்று கூடி நிற்பதைநான் கண்டேன், உடனே, சென்றங்கே காரணம் யாதெனக் கேட்டேன்நான். பாலு என்னும் ஒருபையன் பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம். மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்; மறைத்து மடியில் வைத்தானாம். 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/158&oldid=859522" இலிருந்து மீள்விக்கப்பட்டது