பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அந்த வழியினிலே, உள்ள மைல்கல் ஒன்றிற்கு வெள்ளை யடித்து இருந்ததனால் வெள்ளை முயல்போல் தோன்றியதே! முருகன் அதனை முயலெனவே முட்டாள் தனமாய் எண்ணிவிட்டான். விட்டான் காரை அதன்மேலே "பட்டெனக் கல்லில் மோதியதே ! காரின் முன்னால் இருந்திட்ட கண்ணா டியுமே நொறுங்கியதே. பட்டது காயம், பலமாக. பல்லில் இரண்டு போயினவே. "முயலைக் கொன்று தின்றிட்ட முன்னம் பற்கள் உடைந்தனவே ! ஐயோ, உயிரைக் கொன்றேனே ! அதனால் கடவுள் தண்டித்தார்" என்றே எண்ணி முருகனுமே இளகிய உள்ளம் பெற்றனனே.

  1. 53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/161&oldid=859529" இலிருந்து மீள்விக்கப்பட்டது