இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏமாந் தேநீ போகாதே ! எழுந்து உள்ளே பார்த்திடுவாய்" என்றே கூறிட அத்திருடன் எழுந்தனன்; உள்ளே பாய்ந்தனனே. விரைவில் சென்று சரஸ்வதியும் ‘வெடுக் கெனக் கதவைப் பூட்டினளே! திருடர் நால்வரும் அறைக்குள்ளே 'திருதிரு' எனவே விழித்தனரே ! சரஸ்வதி தெருவில் வந்தனளே! சத்தம் போட்டுக் கத்தினளே. "ஐயோ! திருடன் ! ஐயையோ ! அபாய'மெனவே அலறினளே. ஊரார் எல்லாம் தடியுடனே ஒன்றாய்க் கூடி வந்தனரே. கதவைத் திறந்து திருடர்களைக் 哆 - & கயிற்றால் கட்டி இழுத்தனரே. 166