பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பு ஒன்றை ஊன்றியே கனிந்த வயதுப் பாட்டியும் வம்பு மூண்ட அவ்விடம் வந்து கூற லாயினள்: “பிள்ளை போட்ட சண்டையைப் பெரிது செய்யும் மக்களே, சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள். சுத்த மூடச் செய்கையேன் ? சண்டை மறந்து பிள்ளைகள் சரச மாக அன்புடன் ஒன்று சேர்ந்து திரும்பவும் ஒடி யாடல் பாருங்கள்" என்று பாட்டி கூறவே எதிரில் வந்து பார்த்தனர். அன்பு கொண்டு பிள்ளைகள் ஆடல் கண்டு வெட்கினர். 480

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/188&oldid=859582" இலிருந்து மீள்விக்கப்பட்டது