இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கூறிக் கொண்டே இப்படிக் குரங்கு ஒடி மரத்திலே ஏறிக் கொள்ள லானது; எழும்பி, எழும்பிக் குதித்தது. ஆட்டம் ஆடிக் குதிக்கையில் அங்கே கிளையில் சட்டையும் மாட்டிக் கொண்டு விட்டது! வலிந்து குரங்கு இழுத்தது. இழுத்து, இழுத்துப் பார்த்துமே எடுக்க முடிய வில்லையே! கழுத்து நொந்து போனது; கர்வம் ஒடுங்க லானது. "மரங்கள் தம்மில் தொத்தியே மகிழ்ச்சி யோடு தாவிடும் குரங்கே நானும் என்பதைக் கொஞ்ச மேனும் எண்ணிலேன். மாட்டிக் கொண்டேன் சட்டையை மனிதர் போல. ஆதலால், மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். வந்து உதவும், நண்பரே"
- 38