பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்று மட்டும் சோம்பலாய் - ஒடுக்கிக் கொண்டு உடலையே, அன்று கூட்டில் இருந்தது. ஆபத் தொன்று வந்தது : எங்கி ருந்தோ வந்தனன், ஏறி ஒருவன் மரத்திலே. அங்கி ருந்த கூட்டினை அருகில் நெருங்கிச் சென்றனன். சிறகு இருந்தும் பறக்கவே தெரிந்தி டாமல் விழித்திடும் குருவிக் குஞ்சைப் பிடித்தனன்; கொண்டு வீடு சென்றனன். குருவிக் குஞ்சு அவனது கூட்டில் வாட லானது. அருமை அன்னை உரைத்தது அதனின் காதில் ஒலித்தது. 蔚防 型貂 *愛緩s ృప్త | ; :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/204&oldid=859617" இலிருந்து மீள்விக்கப்பட்டது