பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநா ளிரவு படித்திடவே உட்கார்ந் தேன்நான் தங்கையுடன். 'கடகட எனவே ஒருசத்தம் கதவி லிருந்து வந்ததுவே. "யாரது ?" என்றே நான்கேட்டேன். யாரும் "நான்தான்" எனவில்லை ! திரும்பப் பதிலே வரவில்லை. திருடன் எனவே எண்ணிவிட்டேன். பயத்தால் என்னுடல் நடுங்கியது. பார்த்தனள், தங்கை; சிரித்தனளே. "ஐயோ! அச்சம் கொள்கின்றாய். ஆணோ நீதான் ?" எனக்கேட்டாள். எழுந்தேன் விரைவாய், இடம்விட்.ே எடுத்தேன் தடியைக் கைதனிலே, 20%

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/209&oldid=859627" இலிருந்து மீள்விக்கப்பட்டது