பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனைபோல் இரவில் எழுந்தவனும் போயினன், யாவரும் தூங்குகையில். பானையி னுள்ளேகை விட்டனனே, பல்லால் கரும்பைக் கடித்தனனே. 'ஐயையோ ! என்றஓர் சத்தமுடன் அலறித் துடித்துக் குதித்தனனே. கையை உதறியே கத்துவதைக் - கண்டனர் பெற்றோரும், ஓடிவந்தே. கரும்பினைக் கடித்தவன் வாயினையே கடித்தது, கரும்பினில் மொய்த்திருந்த எறும்புகள் தாமென்று யாவருமே எளிதினில் உண்மை அறிந்தனரே. "பொழுது விடியும் வரையிலும்நீ பொறுத்திட லாகாதோ ?" என்றுரைத்தே அழுதிடும் கண்களைத் துடைத்ததுடன் அவனையும் பெற்றோர்கள் தேற்றினரே. 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/212&oldid=859633" இலிருந்து மீள்விக்கப்பட்டது