பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டி நகர்ந்ததும் எங்களிடம் வந்தார், டிக்கெட் சோதகராம். "எங்கே, உனது டிக்கெட்டை எடுப்பாய்" என்றார் அம்மனிதர். உடனே, பைக்குள் கைவிட்டேன்; உள்ள்ே கானோம் டிக்கெட்டை ! "ஐயோ!' என்றேன்; திடுக்கிட்டேன்; அலசிப் பார்த்தேன்; பயனில்லை 'பலகா ரத்தை வாங்கிடவே பணத்தை விரைவாய் எடுக்கையிலே டிக்கெட் கீழே வீழ்ந்திருக்கும். நினைத்தேன், இப்படி, அதற்குள்ளே, 'ஏனோ தம்பி, நடிக்கின்றாய்? என்னை ஏய்த்திட முடியாது! எடுப்பாய் பணத்தை இருமடங்கு. இங்கே எதுவும் பலிக்காது ! என்றார். அவரிடம் உண்மைதனை எடுத்துக் கூறியும் பயனில்லை! அத்தனை பேர்கள் மத்தியிலே அவமா னத்தால் தலைகுனிந்தேன். 2苍

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/224&oldid=859665" இலிருந்து மீள்விக்கப்பட்டது