பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடிப் பிடிக்கும் ஆட்டத்தில் ஒருவ ருக்கும் அகப்படேன். ஒடிச் சென்று சிவிங்கிமேல் உடனே ஏறிக் கொள்ளுவேன் ! நெட்டை யான கழுத்திலே தொட்டில் ஒன்றைக் கட்டுவேன். ட்டிக் கரும்புத் தங்கையை இட்டு அதனில் ஆட்டுவேன் ! எச்சில் ஊறச் செய்திடும் இனிப்புப் பண்டம் யாவையும் உச்சி மீது அன்னையும் ஒளித்து இனியும் வைப்பளோ ? நடக்கும் ஏணி இருக்கையில் நமக்கு என்ன பயமடா ? இடக்குப் பண்ணி டாதடா ! எங்கும் சுற்ற லாமடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/235&oldid=859681" இலிருந்து மீள்விக்கப்பட்டது