பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கள் விற்கும் கடையருகே போனேன். உடனே, அடடாவோ ! மூக்கில் வாசனை புகுந்ததுவே, முகத்தில் இன்பம் பொங்கியதே. 'பத்து விரல்கள் படைத்ததுபோல் பற்பல மூக்கைப் படைத்திருந்தால் இத்தனை மணமும் மூக்கினுள்ளே இழுத்திட லாமே என நினைத்தேன். 费 褒 索 சாக்கடை தங்கிய வீதியிலே சற்றே ஒருநாள் நடந்திடவே மூக்கைத் துளைத்தது, துர்நாற்றம். முகமும் சுருங்கிப் போனதுவே ! "மூக்கே இல்லா திருந்திட்டால், மிகமிக நல்லது' என்றெண்ணி மூக்கைப் பிடித்துக் கொண்டேநான் மும்முர மாக நடந்தேனே ! 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/237&oldid=859683" இலிருந்து மீள்விக்கப்பட்டது