பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்க எண்ணிப் பாலனும் பாடப் புத்த கத்தினை எடுத்து வைத்துக் கொண்டனன் , இருந்து படிக்க லாயினன். சிறிது நேரம் ஆனது. சிரமம் இன்றிப் படிக்கவே, அருகில் இருந்த தலையணை அதனில் சாய்ந்து கொண்டனன். சற்று நேரம் ஆனது. சாய்ந்து கொண்டே படித்தவன், முற்றும் உடலை நீட்டினன். மிகவும் சுகமாய்ப் படுத்தனன். படுத்துக் கொண்டே படித்தவன், பாதி படிக்கும். முன்னரே படுத்துத் துரங்கிப் போயினன் : பலத்த குறட்டை விட்டனன் i மறுநாட் காலை பரீட்சையில் வந்த கேள்வி கண்டதும் பரக்கப் பரக்க விழித்தனன் ; பரீட்சை கோட்டை விட்டனன் ! 233

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/242&oldid=859689" இலிருந்து மீள்விக்கப்பட்டது