பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லெ டுத்துப் பூனையார் விரைந்து ஒடும் எலிகளைக் கொல்ல ஆசை கொள்கிறார் ; குறியும் பார்த்து எய்கிறார் ! துறட்டி ஒன்றை யானையார் திக்கை நுனியில் ஆவலாய் இறுக்கிப் பிடித்துச் செல்கிறார் ; இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார், உயரே உள்ள பழங்களைக் ாடு ஒங்கி அடிக்கிறார் ; கனிகள் தம்மை உதிர்க்கிறார் : குட்டி நாயார் உச்சியில் ரொட்டிப் பெட்டி இருப்பதை, எட்டி எடுத்துத் தின்னவே, ஏணி ஏறிச் செல்கிறார் ! “உங்க ளைப்போல் எதையுமே யுக்தி யோடு செய்திட, எங்க ளுக்கும் தெரியுமே ' என்றோ காட்டு கின்றன ! 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/243&oldid=859690" இலிருந்து மீள்விக்கப்பட்டது