பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்தை, ஆந்தை, பகலெல்லாம் அடைந்து கிடப்பது எங்கே, சொல் ? தேடித் தேடிப் பார்த்தேன்நான். தெரிய வில்லை, உன்னுருவம். களவு செய்தே அகப்பட்ட கள்ளன் போலே விழிப்பது.ஏன் ? பொந்துக் குள்ளே இருப்பது ஏன் ? பொழுது பட்டே வருவது.ஏன் ? முட்டைக் கண்கள் கண்டால்நாம் மிரள மாட்டோம்; வந்திடுவாய் வெளிச்சம் கண்டால் கூசிடுமோ, விரிந்த கண்கள் ? கூறிடுவாய். "அழகை ஈசன் தரவில்லை. அதனால் நானும் வரவில்லை" 235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/244&oldid=859691" இலிருந்து மீள்விக்கப்பட்டது