பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றா காரணம் கூறுகிறாய்? இதற்கேன் வெட்கம்; வந்திடுவாய். ஆந்தை, ஆந்தை அன்றொருநாள் அப்பா உனது கதைசொன்னார். கண்ணைச் சுழற்ற மாட்டாயாம் ; கழுத்தைத் திருப்பியே பார்ப்பாயாம். புத்தி உனக்கு அதிகமெனப் புகழ்ந்தார் தந்தை மேன்மேலும். புத்தி மிகுந்த அறிஞரேநீர் புத்தகம் எத்தனை எழுதிவிட்டீர்? எந்தக் கடையில் விற்றிடுமோ ? என்ன விலைக்குக் கிடைத்திடுமோ ? சும்மா விழித்துப் பார்ப்பதுஏன் ? சொன்னால் வாய்தான் வலித்திடுமோ ? 235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/245&oldid=859692" இலிருந்து மீள்விக்கப்பட்டது