பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனையாரே, பூனையாரே, போவ தெங்கே சொல்லுவீர் ? கோலிக் குண்டுக் கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்? பஞ்சுக் கால்க ளாலேநீர் பையப் பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்? எலி பிடித்துத் தின்னவா ? அங்கு எங்கே போகிறீர்? அடுப்பங் கரையை நோக்கியா ? சட்டிப் பாலைக் குடிக்கவா, சாது போலச் செல்கிறீர்? சட்டிப் பாலும், ஐயையோ, ஜாஸ்தி யாய்க் கொதிக்குதே! தொட்டால் நாக்கைச் சுட்டிடும். துர ஒடிப் போய்விடும் ! 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/30&oldid=859730" இலிருந்து மீள்விக்கப்பட்டது