பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லுக்குள்ளே அரிசி இருக்கு, சொல்லாதே ! நெருப்புக்குள்ளே சூடு இருக்கு, சொல்லாதே ! சொல்லுக்குள்ளே பொருள் இருக்கு, சொல்லாதே ! சோற்றுக்குள்ளே சத்து இருக்கு, சொல்லாதே ! பாட்டுக்குள்ளே இசை இருக்கு, சொல்லாதே ! பழத்துக்குள்ளே ருசி இருக்கு, சொல்லாதே ! காட்டுக்குள்ளே மரம் இருக்கு, சொல்லாதே! கடலுக்குள்ளே உப்பு இருக்கு, சொல்லாதே! பூமிக்குள்ளே நீர் இருக்கு, சொல்லாதே! பூவுக்குள்ளே தேன் இருக்கு, சொல்லாதே ! நாமிப்போது பேசியதை யெல்லாம்நீ, நாலுபேர்கள் காதுகேட்கச் சொல்லாதே ! 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/35&oldid=859739" இலிருந்து மீள்விக்கப்பட்டது