பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையன்-கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே ? கிளி- இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ ? பையன்-இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி- பழங்கள் தாமே தின்னலாம். பட்ச ணங்கள் இல்லையே! பையன்-பட்ச ணங்கள் வாங்கவே பணமும் கொண்டு வருவேனே. கிளி- பணத்தை எந்த இடத்திலே - பாது காத்து வைப்பதோ ? பையன்-பணத்தைச் சிறகி னுள்ளேயே பாது காத்து வைப்பேனே. கிளி- பறக்கும் போது, ஐயையோ, பணம் விழுந்து போகுமே ! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/39&oldid=859746" இலிருந்து மீள்விக்கப்பட்டது