பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து, வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு, விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து, கோல மிட்ட பானையதில் கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத்துக்கி அடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப் பொங்கிப் பாலும் வருகையிலே 'பொங்க லோபால் பொங்கலென்போம். தேங்கா யோடு கரும்பும்,சோறும் தெய்வத் துக்குப் படைத்துவைத்து, ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்; ஒடி ஆடிப் பாடிடுவோம். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/50&oldid=859767" இலிருந்து மீள்விக்கப்பட்டது