பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டு, இங்கே பாரடி. பலவி தத்தில் மலர்களை. சிட்டுப் போல மலரெலாம் சிரித்த ழைக்கப் பாரடி. பட்டுப் போல வர்ணமும் பலவி தத்தில் காணுதே. மொட்டுப் பூவும் காலையில் தட்டுப் போல விரியதே. எட்டுத் திக்கும் வாசனை எழுந்து வீசிச் செல்லுதே. வட்ட மிட்டு வண்டினம் வந்து தேனை உண்ணுதே. தட்டில் கொய்து மலர்களைத் தலையில் வைத்து மகிழுவோம். கட்டி நல்ல மாலையாய்க் கடவு ளுக்குச் சாத்தவே. கொட்டு மேளம் கேட்டதும், கோயி லுக்கு ஒடுவோம். 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/56&oldid=859778" இலிருந்து மீள்விக்கப்பட்டது