பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்முகம் காட்டிடுமே-அதனால் - இன்பமும் ஊட்டிடுமே. நன்மணம் வீசிடுமே-சுற்றி நான்கு திசைகளுமே. வண்டுகள் தேன்விரும்பி-நாடி வந்திடும் மொய்த்திடவே. கண்டவர் யாவரையும்-இதனது காட்சி மயக்கிடுமே ஈசன் திருவடியில்-இதுவே என்றென்றும் நின்றிடுமே. பாசமாய் ம்க்களுமே-இதனைப் பறித்துச் சூடுவரே. மணம் நடக்கையிலே-அங்கே மனத்தை வீசிடுமே. குணம் பெரிதாகும்-ஆனால் குற்றம் எதுவுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/79&oldid=859826" இலிருந்து மீள்விக்கப்பட்டது