பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா வைப்போல் பெரியவனாய் ஆன வுடனே நானுமே,

மாட்டைக் கொண்டு கலப்பை பூட்டி, மண்ணை நன்கு உழுவேனே. நாட்டில் உள்ள பஞ்சம் போக நானும் உதவி செய்வேனே. அப்பா வைப்போல் பெரியவனாய் ஆன வுடனே நானுமே, நூற்று நெய்து வேட்டி, சேலை நேர்த்தி யாகத் தருவேனே. வேற்று நாட்டவர் தயவு ஏனோ ? வேண்டாம் என்று சொல்வேனே. அப்பா வைப்போல் பெரியவனாய் ஆன வுடனே நானுமே, கொத்த னாகச் செங்கல் கொண்டு கோயில், வீடு கட்டுவேன். மெத்தப் புகழும் தாஜ்மஹாலை ஒத்தி ருக்கச் செய்குவேன். 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/83&oldid=859836" இலிருந்து மீள்விக்கப்பட்டது