பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ई-इम्रै கடலின் மீது செல்லும் கப்பல் பார், தம்பி, பார்-அதைக் காணப் பலர் வருவதையே பார், தம்பி, பார். 'தடத'டென்று அலைகள் வந்து பார், தம்பி, பார்-காலைத் தழுவி விட்டுப் போவதையே பார், தம்பி, பார். சங்கும் நல்ல கிளிஞ்சல்களும் பார், தம்பி, பார்-இங்கே சரள மாகக் கிடைக்குதடா பார், தம்பி, பார். பொங்கு கின்ற பாலினைப்போல் பார், தம்பி, பார்-இங்கு தங்கி நிற்கும் நுரையுமுண்டு பார், தம்பி, பார். 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/89&oldid=859847" இலிருந்து மீள்விக்கப்பட்டது