பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多餐孫豹 ി 勿 கொட்டி டுவாய் மழையே-நாங்கள் குதுகல மெய்திடவே. சொட்டுச் சொட்டாய்த் தொடங்கி-மழையே 'சோவெனப் பெய்திடுவாய். வளைவு கட்டி வைத்தே-பெரியார் வருகை நோக்குதல்போல் வளைந்த வான வில்லும்-உனது வருகை காட்டிடுமே. காரிருள் மேக மதாய்-அலைபோல் காற்றினில் சென்றிடுவாய். மீறியே சென்றி டாது-மலைகள் மோதிடப் பெய்திடுவாய். நெற்றியில் நீர் சொரிய-உழவர் நிலம் உழுதபின்பும் வற்றிய குட்டை கண்டால்-உடனே மாமழை பெய்திடுவாய். 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/93&oldid=859853" இலிருந்து மீள்விக்கப்பட்டது